என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் 12-வது வார்டில் தடுப்பு சுவர்-கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
- கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகராட்சி 12-வது வார்டில் ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதனை முன்னாள் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான ராமசாமி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மணிகண்டன், குமரேசன், ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், நகர துணை செயலாளர் முருகேசன், கிளை செயலாளர் சிக்கந்தர், சண்முகம், நந்தகுமார் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






