search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் இ.சி.ஆரில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் முற்றுகை
    X

    கல்பாக்கம் இ.சி.ஆரில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் முற்றுகை

    • சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    ஜி.20 மாநாட்டிற்கு சென்னை வரும் பிரதிநிதிகள் சிலர் ஜன.30-31 தேதிகளில் சென்னையில் இருந்து கல்பாக்கம் வழியாக புதுச்சேரி ஆரோவில் செல்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்த 3கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மாமல்லபுரம்-கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மழையால் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கல்பாக்கம் புதுப்பட்டினம் வரும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினர். 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சாலை அமைக்கும் பணி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×