search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
    X

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

    • கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
    • விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 67).

    இவர் சேந்த மங்கலத்தில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். தனது உணவகத்தில் இருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு தினமும் அவர் உணவு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று திருவாரூர் கடை தெருவிற்கு சென்று வீட்டிற்கு தேவை யான காய்கறிகளை வாங்கிக் கொண்டு சேந்தமங்க லத்திற்கு வந்துள்ளார்.

    அங்கு அவரது உணவகத்திலிருந்து உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று கொடுத்துவிட்டு, பேக்கரி வாசலில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக திருவாரூர்-மயிலாடு துறை சாலையில் சென்றுள்ளார்.

    அப்போது திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டனர்.

    விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×