search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு
    X

    சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு

    • சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் ஜங்ஷன் அருகே உள்ள ஓட்டலில் காரை நிறுத்தினர். உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பிய போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
    • மேலும் காரில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ கேப்பன் (வயது 40). இவர் நேற்று இரவு காரில் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் ஜங்ஷன் அருகே உள்ள ஓட்டலில் காரை நிறுத்தினர். உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பிய போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் காரில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஓட்டல் வாசலில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் சென்னை தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (45). இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா அருகே வந்த போது, அங்குள்ள ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த ரூ.5000, 2 பைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அன்னா தானப்பட்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×