என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் ரூ.85 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை- சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
- நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
- புதிய சிமெண்ட் சாலை பணியை சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூ ராட்சி துணைத்தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலை பணியை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், அருணாசலம், ராஜ துரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதி விநாயகம் , தொழிலதிபர் மணிகண்டன், சீதாராமன், கிளை செயலாளர் அல்போ ன்ஸ், லிங்க வேல் ராஜா, மகளிரணி சரஸ்வதி, கிளை செயலாளர் சாலமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






