search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு: 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத் தொகை
    X

    சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு: 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத் தொகை

    • 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.
    • இதுவரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சொத்து வரி குறிப்பிட்ட காலகெடு வுக்குள் சொத்து வரி செலுத்துவதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.

    5.13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டுகளில் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெறும் தகுதியை இழந்துள்ளார்கள்.

    கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த 25 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.

    இதையடுத்து அவர்கள் வரியை கட்டினார்கள். சொத்து வரி கட்டாததற்காக இதுவரை சொத்துக்கள் எதையும் மாநகராட்சி பறிமுதல் செய்யவில்லை.

    கடந்த 1-ந்தேதிக்கு முன்பே சுமார் 40 ஆயிரம் பேர் முன் கூட்டியே ஆன்லைனில் 6 சதவீத வரி உயர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது.

    முன் கூட்டியே வரி செலுத்தியவர்களும் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    Next Story
    ×