search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாடு முட்டி குழந்தை சாவு
    X

    மாடு முட்டி குழந்தை சாவு

    • தலையில் படுகாயமடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாய தொழிலாளி.

    இவருடைய மகன் மாதேஷ் (வயது3).

    இவர்கள் கடந்த 21-ந் தேதி திருப்பனந்தாளில் இருந்து மானம்பாடி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.திருவாய்ப்பா டியில்சென்றபோது அங்கு வந்த மாடு இருவரையும் முட்டியது.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மாதேஷ் மேல் சிகிச் சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை மாதேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×