search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா தொடக்கம்
    X

    பவானி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நாள் கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா தொடக்கம்

    • முப்பெரும்தேவியருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • வருகிற 2-ந்தேதி பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாகக் கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரைப் திருவிழாவிற்கு நாள் கால் நட்டுதல் நிகழ்ச்சி இன்று குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவியர் அம்மாக்களுக்கு சந்தனம், குங்குமம், தயிர், பால், இளநீர் நறுமணப் பொருட்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின் சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, மகாகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    காலை 8 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் பக்தர்கள் அக்னிச்சட்டி, அக்னி காவடி, அலகு குத்துதல் நடைபெற இருக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணி அளவில் சிறப்பு அன்ன தானம் நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை 6 மணி அளவில் கோவில் முன்பு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மாலை 6 மணி முதல் முளைப்பாரி கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா ஆந்திரா கர்நாடகா மும்பை ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×