search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய கலெக்டர்
    X

    மாற்றுதிறனாளி குடும்பத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று நலதிட்ட உதவி வழங்கல்

    மாற்றுத்திறனாளிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய கலெக்டர்

    • ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
    • வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).

    இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த சூழலில் உடல் முழுவதும் ஊனமுற்ற மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி மகன் 30 வயது நிரம்பிய பாலசுப்பி ரமணியனுடன் தனியாக ஒரு குடிசை வீட்டில் வருமானம் இன்றி தவித்து வருகிறார்.

    இவர்கள் படும் கஷ்டம் குறித்த வீடியோ நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு கிடைத்தது .

    உடனடியாக தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சிஅலுவலர் தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் துணை இயக்கு னர் சுகாதார பணிகள் தொடர்பு கொண்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவமனைக்கு அரசு செலவில் அழைத்து சென்று மருத்துவ உதவியும்மாற்று திறனாளிகள் நல அலுவலரிடமும் வேண்டிய பொருட்களை உடன் வழங்கவும் 5 மாதமாக நின்று போனமாத உதவித்தொகை வீட்டிற்கே ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளை யும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    திடீரென்று மாவட்ட கலெக்டர்வீட்டிற்கு நேரில் வந்து வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் தகவல் கிடைத்தவுடன் 30 நிமிடத்தில் அனைத்து உதவிகளையும் செய்த கலெக்டர் அருண்தம்பராஜ் நேரில் சென்று அனைத்து உதவிகளையும் செய்தது ஆறுதல் கூறியது அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்ரனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின், மாவட்ட மாற்றுதி றனாளி மாவட்டஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் செய்வகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவல ர்கனகசுந்தரம், சமூக ஆர்வலர் சிவகுமார் மற்றும் சுகதார துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×