search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம்
    X

    கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம் நடந்தது.

    கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம்

    • மண் சாலையாக உள்ள கல்லூரி நுழைவுவாயிலை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக அமைக்க வேண்டும்.
    • சுதந்திர போராட்ட வீரர் தியாகி சீனிவாசராவ் பெயரை அரசு கலைக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருத்துறைப்பூண்டி கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம் கல்லூரி கிளைத் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணால் தலைமையில் நடைபெற்றது.

    மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஜேபி வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் புதிய புதிய தலைவராக பி.பரசுராமன் செயலாளர் எம்.மணிபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் நடந்து செல்லும் கல்லூரி நுழைவுவாயில் மண் சாலையாக உள்ளது.

    இதனை போர்க்கால அடிப்படையில் தார் சாலையாக அமைத்திட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரியில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்லூரி இயங்கி வருகிறது இதில் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவுகளை உடனடியாக தொடங்க வேண்டும்,சுதந்திர போராட்ட வீரர் தியாகி பி. சீனிவாசராவ் பெயரினை அரசு கலைக்கல்லூரி சூட்ட வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

    Next Story
    ×