search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரிக்குள் இருந்த வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை
    X

    பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரிக்குள் இருந்த வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை

    • நாமக்கல் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போலீசில் தகவல்.
    • டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது பணம் இருந்ததாக தகவல்.

    கேரள மாநில ஏ.டி.எம். கொள்ளை

    கேரள மாநிலம் திருச்சூரில் மாப்ராணம், கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.மையங்களில் நேற்று இரவு யாரோ புகுந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியே சென்றவர்கள், ஏ.டி.எம். எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம். மையங்களுக்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த ரூ.65 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தனர்.

    ஏ.டி.எம். மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பெயிண்ட் அடித்து பதிவுகள் தடுக்கப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வெள்ளைநிற காரில் முகமூடி அணிந்த 4 பேர் வந்து இறங்குவதும், அவர்கள் கையில் கியாஸ் கட்டர் எடுத்து வந்திருப்பதும் தெரியவந்தது. 4 பேரும் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைவதும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா மீது பெயிண்ட் அடிக்கின்றனர். பின்னர்தான் அவர்கள் கியாஸ் கட்டர் கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி பணம் எடுத்துள்ளனர்.

    Next Story
    ×