search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கபிலர்மலை விவசாயிகளுக்கு  உழவன் செயலி பயிற்சி முகாம்
    X

    கபிலர்மலை விவசாயிகளுக்கு உழவன் செயலி பயிற்சி முகாம்

    • நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
    • ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்து விவசாயி–களுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள், மானிய விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் சுள்ளிபாளையம் கிராம உழவர் ஆர்வலர் குழுக்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×