என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு
- நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன் தலைமையிலான இளைஞர்கள் அகிலன், அருண்பிரசாத், உமாசங்கர், திலீப்குமார், தினேஷ் ஆகியோர் கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக மீண்டும் கோவை திரும்பிய இக்குழுவினருக்கு, வாழப்பாடி நெஸ்ட் மற்றும் துளி அறக்கட்டளை தன்னார்வலர்கள், காவல் துறையினர் சார்பில் வாழப்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.சி.செல்வம் தலைமையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளித் தலைமையாசரியர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன், ஜவஹர், சட்டக்கல்லுாரி மாணவி விவேகா, தன்னார்வலர் லோகநாதன் ஆகியோர் இணைய குற்றங்கள் தவிர்ப்பு, இணைய தளம், சமூக ஊடகங்களை பாதுகாப்பாக கையாளும் முறை, சட்டவிதிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பு செயலி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் ஆசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்