என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • தி.மு.க. ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் வந்து விடுகிறது.
    • செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருவாரூர்:

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

    திமுக ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் வந்து விடுகிறது. மின் கட்டனம் உயர்தியுள்ளனர், குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணி க்கம், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பி கே யு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×