என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
    X

    தீமிதி விழா நடந்தது

    திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

    • கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தீமிதி தெப்பத் திருவிழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நடைபெற்றது.

    காலை முதலே அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 500 பக்தர்கள் காவடி எடுத்து கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×