search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. கவுன்சிலரை மிரட்டிய 3 பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு
    X

    தி.மு.க. கவுன்சிலரை மிரட்டிய 3 பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

    • குமாரசாமிப்பட்டி தி.மு.க பகுதி செயலாளராகவும், 14-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
    • சாந்தமூர்த்தி அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவர் குமாரசாமிப்பட்டி தி.மு.க பகுதி செயலாளராகவும், 14-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாந்தமூர்த்தி வீட்டின் கதவை தட்டிய மர்மநபர்கள், மதுபோதையில் தகாத வார்த்தையில் திட்டி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

    இதை பார்த்த கவுன்சிலர் சாந்தமூர்த்தி, உடனே சேலம் மாநகர போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள், 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பியது. இதுகுறித்து சாந்தமூர்த்தி அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை பார்த்து ஆய்வு செய்ததில், குமாரசாமிப்பட்டியை சேர்ந்த மணி (வயது 35), வினோத்(24), சூர்யா(24) மற்றும் அவர்களது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கவுன்சிலரை மிரட்டியது தெரிந்தது.

    இதையடுத்து மணி, சூர்யா, வினோத் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×