search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என்ன ஆனது?
    X

    தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என்ன ஆனது?

    • தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.
    • 19 மாதங்கள் ஆகிவிட்டது.

    வடவள்ளி

    சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும், தமிழக த்துக்கும் எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

    அ.தி.மு.க. அரசு கட்டிய பாலங்களில் தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசோ சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்களை வாட்டி வதைக்கிறது.

    குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 கொடுப்பதாக சொன்னார்கள். 19 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை.

    இங்கு இருக்கும் காவல்துறை என் கட்சி காரர்கள் மீது பொய் வழக்கு பதிய வேண்டாம். நடுநிலையாக செயல்படுங்கள். தமிழகத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைப்பெறுகிறது.

    அ.தி.மு.க. போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள். தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எதற்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 இடங்களையும் வெல்வோம். சட்டமன்றதேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×