என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. நிர்வாகிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் போஸ்டர்- அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு
    X

    தி.மு.க. நிர்வாகிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் போஸ்டர்- அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு

    • கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • அணைக்கட்டு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இந்த திடீர் மோதல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார். இவருக்கும் அணைக்கட்டு தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ஏரி புதூர் வெங்கடேசன் கெங்கநல்லூர் கவுன்சிலர் மகாலிங்கம் அணைக்கட்டு மத்திய ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கடந்த 13-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் நீர்நிலை ஏரியில் மணல் எடுத்தனர்.

    இதை எதிர்த்ததால் கொன்று ஏரியில் புதைப்பதாக மிரட்டல் விடுத்தனர். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கெங்கநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவர் என்.செந்தில் குமாரை, சாதி பெயரை சொல்லி திட்டிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    எஸ்.சி, எஸ்.டி, சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிய அந்த போஸ்டரில், தி.மு.க.வினர் செந்தில் குமாருக்கு எதிராக பயன்படுத்திய அதே தகாத வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த ஒரு நாள் கழித்து, கலெக்டர் கெங்கநல்லூருக்கு வந்து, கிராமம் மற்றும் ஏரியை ஆய்வு செய்தார். இதையடுத்து 3 பேரும் என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர் என்றார்.

    அணைக்கட்டு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இந்த திடீர் மோதல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×