search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே மதுபோதையில் தம்பியை அடித்து கொன்ற டிரைவர் கைது
    X

    கோவில்பட்டி அருகே மதுபோதையில் தம்பியை அடித்து கொன்ற டிரைவர் கைது

    • பாண்டித்துரையும்,கருப்பசாமியும் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
    • ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா.

    மதுபோதை தகராறு

    இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 29), கருப்பசாமி (26). இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் நேற்று இரவில் தங்களது லோடு ஆட்டோவில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு- ஊத்துப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றனர்.

    தம்பி அடித்து கொலை

    அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னர் பாண்டித்துரை அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாண்டித்துரையை தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே பதுங்கி இருந்த பாண்டித்துரையை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×