search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
    X

    பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

    • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
    • விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    இந்திய கட்டுனர் சங்க நாகப்பட்டினம் மையம் சார்பாக வெங்கிடங்கால் செம்பை நதி கிராமத்தில் கிராம மக்களுடன் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு இந்திய கட்டுணர் சங்க நாகப்பட்டினம் மைய தலைவர் அரிமா ச. மீரா உசேன் தலைமை தாங்கினார்.

    கட்டுனர் சங்க பொறுப்பாளர்கள் முனைவர் நவாப்ஜான், முனைவர் காளிதாஸ், சர்புதீன் மரைக்கார் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் கே.எஸ்குமாரவேல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாகூர் ஏ.ஆர்.நௌஷாத் கலந்து கொண்டனர் விழாவில் ஆடிட்டர் குமாரவேலு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×