search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை மாத திருவோண நட்சத்திர சிறப்பு அபிஷேகம்
    X

    சித்திரை மாத திருவோண நட்சத்திர சிறப்பு அபிஷேகம்

    • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை கைலா சநாதர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    சித்திரை மாதம் வசந்த காலமாகவும், சித்திரை மாதம் திருவிழாக்கள் நிறைந்த மாதமாகவும் தமிழக கோவில்களில் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டா டப்படுகிறது.

    சிறப்பு மிக்க சித்திரை மாதம் வரும் திருவோண நட்சத்திரம் சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

    இதையொட்டி சென்னி மலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர் உட்பட 16-க்கும் மேற்பட்ட ேஹாம திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×