search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
    X

    கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

    • வனப்பகுதிக்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர்.
    • குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி பிரிவு கொளஞ்சி மடுவு வனப்பகுதியில் கடம்பூர் வனச்சராக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதி க்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியம ங்கலம் புலிகள் காப்பக கால்ந டை உதவி மருத்துவர் சதா சிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.

    பின்னர் தொண்டு நிறுவன பிரதிநிதி கிருஷ்ணகுமார், வனக்குழு தலைவர் மாரியப்பன், வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×