search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நிபந்தனையுடன் நடத்த ஏற்பாடு
    X

    கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நிபந்தனையுடன் நடத்த ஏற்பாடு

    • ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • கடந்த 8-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கோவிலின் பழமை தன்மை மாறாமல் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி பரிவார மூர்த்திகள் மற்றும் விமான ராஜ கோபுரங்களும் பலாலயம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலுக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி கடந்த 8-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதன் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 30-ந் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×