என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்

- ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
- இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் பொதுமக்கள் பலர் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குதிரைகள் அடிக்கடி அந்தியூர் நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தியூர் பஸ் நிலையம் பகுதி, பர்கூர் சாலை, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திலும் குதிரைகள் அதிக அளவில் சுற்றுகின்றன.
ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திற்குள் நடை பயிற்சி செய்பவர்களும், விளையாடும் மாணவர்க ளும் எந்த நேரத்தில் இந்த குதிரை வந்து நம்மை தாக்கி விடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு சென்று வருகிறார்கள்.
இதேபோல் சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும்தங்களை கீழே தள்ளி விடுமோ என்ற பயத்திலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குதிரையின் உரிமை யாளர்களை எச்சரிக்க வேண்டும் என்று பொது மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.