என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பவானி ஆற்றில் சத்துணவு பெண் சமையலர் பிணமாக மீட்பு
- பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குப்பண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி விஜயகுமாரி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலுச்சாமி இறந்து விட்டார்.அதன் பின்பு விஜயகுமாரி கருவல் வாடிபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். விஜயகுமாரி அத்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார்.
அவரது மகள் கோவையில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். தினமும் தந்தையிடம் பேசி வந்த விஜயகுமாரி கடந்த 2 நாட்களாக தந்தையிடம் போனில் பேசவில்லை.
இதனையடுத்து விஜயகுமாரின் தந்தை மகளை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.
பின்னர் வீட்டிற்கு பின்புறம் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின்உடல் மிதந்து வருவதாக தகவல் அறிந்து விஜயகுமாரின் தந்தை அங்கு சென்ற பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகள் என்று உறுதி செய்தார்.
இதனையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகுமாரி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்