search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்கில் பிணமாக தொங்கியது மருத்துவ கல்லூரி மாணவர்
    X

    தூக்கில் பிணமாக தொங்கியது மருத்துவ கல்லூரி மாணவர்

    • வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு வழியில் ஆத்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள வனப் பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபரின் அருகே செல்போன் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அது சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் அதை கைப்பற்றி சார்ஜ் செய்து அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பண்ருட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (19) என்பதும், அவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆனால் அவர் எப்படி சென்னிமலைக்கு வந்தார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×