என் மலர்
உள்ளூர் செய்திகள்

பையூரில் 16-ந் தேதி உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி
- உழவர் நலத்துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
- உணவு மேளா, விவசாயிகள் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளூர் ரகம் மற்றும் பதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்கும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு 3 முறை உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சியினை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்திட தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம்.
இதில் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்ட பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படும். மேலும், இந்த கண்காட்சியில் விவசாயி கள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு மேளா, விவசாயிகள் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய பெருமக்கள் தங்களிடம் உள்ள உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






