என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் பெண் என்ஜினீயர் புகைப்படத்துடன் போலி இன்ஸ்டாகிராம் பக்கம்
- பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார்.
- என்ஜினீயர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் யாரோ மர்மநபர் ஒருவர் பெண் என்ஜினீயரின் புகைப்படத்தை வைத்து போலியாக அவரது பெயரில் இன்ஸ்டாகிரம் பக்கத்தை தொடங்கினார். பின்னர் அந்த பக்கத்தின் மூலம் பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை பார்த்த இளம்பெண்ணின் நண்பர்கள் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் என்ஜினீயர் இது குறித்து உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர் பெயரில் அவரது புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி மெசேஜ் அனுப்பி வந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்