search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
    X

    ஆலங்குளத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

    • விவசாயியான பாண்டியராஜிக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
    • மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(வயது 39). விவசாயி. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

    பாண்டியராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவரை, மனைவி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×