search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு துப்பாக்கியை காட்டியும் மிரட்டல்
    X

    காயமடைந்த தந்தை, மகனை படத்தில் காணலாம்.

    நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு துப்பாக்கியை காட்டியும் மிரட்டல்

    • அரிவாளால் சரமாரியாக அவர்கள் 2 பேரையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த இருவரும் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர்.
    • போலீசார் இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (40). விவசாயி. இவரது மகன் சந்தோஷ் (18). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கொய்யா சாகுபடி செய்துள்ளனர்.

    வெள்ளைச்சாமிக்கும் இவரது சகோதரர் பழனியாண்டி (52) என்பவருக்கும் இடையே நில தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தோட்டத்தில் கொய்யா பழங்கள் பறித்துக் கொண்டிருந்த வெள்ளைச்சாமியிடம் பழனியாண்டி மற்றும் இவரது மகன் அழகர் ஆகியோர் தகராறு செய்தனர்.

    அப்போது கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை காட்டி வெள்ளைச்சாமி மற்றும் அவரது மகன் சந்தோஷை மிரட்டினர். மேலும் அரிவாளால் சரமாரியாக அவர்கள் 2 பேரையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த சந்தோஷ் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர்.

    அங்கிருந்த போலீசார் இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த அண்ணன் மற்றும் அண்ணன் மகனை நாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Next Story
    ×