என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி: வாட்ஸ்-அப் உரையாடல்கள் ஆய்வு

- முறை தவறிய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காதலனின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
அண்ணன்-தங்கை உறவு முறை என கூறி காத லுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்தேன் என கைதான கல்லூரி மாணவி தெரி வித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் தனது வீட்டிலேயே இ-சேவை மையமும் வைத்துள்ளார்.
இவருக்கும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயதுடைய மாணவிக்கும் 2 ஆண்டுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்று தெரிந்ததும் முறை தவறிய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் மாணவி, தனது காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து காலாவதியான எலி மருந்தை 'டீ'யில் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை, திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்து அவர் காதலனுடன் பேசிய வாட்ஸ்-அப் உரையாடல் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் காதலனின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.