search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் நகரில் செல்லும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் தூர் வாரும் பணி:  மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்
    X

    விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் எந்திரத்தின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டார். அருகில் நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா உள்ளார்.

    விழுப்புரம் நகரில் செல்லும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் தூர் வாரும் பணி: மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்

    • சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • எந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    வடகிழக்கு பருவ மழை ஒட்டிதமிழகம் முழுதும் கனத்த மழை பெய்யக்கூடும் எனஇந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இன்று விழுப்புரம் நகரில் செல்லும் அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் நகராட்சி சார்பில் எந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று அதி காலை முதல் மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார். திரு.வி.க. சாலையில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும், சிலப்பதிகார தெரு, வி.மருதூரில் செல்லும் பிரதான கோலியனூரன் வாய்க்கால்களை பார்வையிட்டார். அப்பொழுது ஒரு சில இடங்களில் வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ள சிறு பாலங்கள் குறுகிய அளவில் கட்டப்பட்டுள்ளது கண்டறிந்தார்.

    இது சம்பந்தமாக கலெக்டர் கூறுகையில், மாவட்ட முழுவதும் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் செல்லும் பாதைகளை பார்வையிட்டு வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதிக்குள் இப்பணிகள் குறித்து அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து அனிச்சம் பாளையம் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அறிவுரை வழங்கினார். நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, பொதுப் பணித்துறை நீர் ஆதாரம் உட்கோட்ட பொறியாளர் சோபனா நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சிவசேனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×