search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகை எதிரொலி கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு
    X

    ரம்ஜான் பண்டிகை எதிரொலி கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

    • எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.
    • ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும். மிளகாய் மற்றும் ஆடு, மாடு விற்பனைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சந்தையில், எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரை விலை போனது. இன்று 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.ரம்ஜான் பண்டிகை எதிரொலி கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

    Next Story
    ×