என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சேலத்தில் மளிகை கடையில் பணம் திருட்டு
- சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் மளிகை கடையை நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
- நேற்று காலை கடையை திறக்க வந்தார். பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சாகுல் ஹமீது (வயது 37). இவர் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீது, உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்