search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலத்தில் மளிகை கடையில் பணம் திருட்டு
    X

    சேலத்தில் மளிகை கடையில் பணம் திருட்டு

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் மளிகை கடையை நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
    • நேற்று காலை கடையை திறக்க வந்தார். பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சாகுல் ஹமீது (வயது 37). இவர் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீது, உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×