search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சூலூரில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல்
    X

    சூலூரில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல்

    • மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
    • லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான லாரியில் காவல் கிணறு பகுதியில் இருந்து கோவைக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டத்தை சேர்ந்த பிஜு (47) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே லாரி வந்தபோது சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பி ஓடினார். லாரியின் பாரத்தை பரிசோதித்த போது லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 18 டன் அளவு அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனே லாரியை சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். மேலும் லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×