search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தகராறில்   இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    குடும்பத்தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தளபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்.இவரது மனைவி ஆர்த்தி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    கடந்த 9-ந்தேதி இதே போல ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஆர்த்தி விஷம் குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தானநிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணமாகி 7 வருடங்களுக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஏ.எஸ்.பி.அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×