என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை
- பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ. 90 -லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
- நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எமகல்நத்தம், மல்லபாடி, கூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி கட்டிடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ. 90 -லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர்கள் தம்பிதுரை, சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், மகேந்திரன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்