search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வங்கி மேலாளர் வீடு உள்பட 2 இடங்களில் நகை, பணம் கொள்ளை
    X

    கோவையில் வங்கி மேலாளர் வீடு உள்பட 2 இடங்களில் நகை, பணம் கொள்ளை

    • வீட்டு பீரோவை திறந்த போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை
    • வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றினர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் (70). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அத்திபாளையம் பிரிவில் உள்ள சர்ச்சுக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினர்.

    மறுநாள் காலையில் அவர் வீட்டு பீரோவை திறந்த போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). மில் தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக காரமடைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 55 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஜெயபால் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×