search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் 10,838 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகிறார்கள்:  தேர்வு மையங்களுக்கு செல்ல  சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு
    X

    தருமபுரியில் 10,838 பேர் குரூப்-1 தேர்வு எழுதுகிறார்கள்: தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு

    • 35 தேர்வு மையங்களில் சுமார் 10,838 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.
    • 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கி ணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குருப் 1-ல் அடங்கியுள்ள பதவிக ளுக்கான முதன்மைத்தேர்வு வருகின்ற நாளை சனிக்கிழமை அன்று முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 35 தேர்வு மையங்களில் சுமார் 10,838 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.

    இத்தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டுமெனவும், 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து, அவற்றை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×