search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
    X

    கோத்தகிரியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

    கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது.

    அரவேணு

    கோத்தகிரியில் தமிழ் இளைஞர் நல சங்கம் ஒருங்கிணைத்த மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம் கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் யோகலிங்கம் தலைமை வகித்தார். பூவரசன் வரவேற்று பேசினார் அகரம் சிவா, சத்திய சிவன், பழக்கடை செல்வம் சுப்பிரமணியம், தம்பி ராஜா, சதாசிவம், மோகனதாஸ், வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன், சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், கீரனூர்முத்து, ராஜேந்திரன், சண்முகனார், ஐயம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலை சாரங்கபாணி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தியாகிகள் குறித்து தாமரைச்செல்வன் ஜெகதீசன் இளங்குமரன் திலகவதி ஆகியோர் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழின உணர்வாளர் முத்துலட்சுமி வீரப்பன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் கைத்தலா மதி, தவிட்டுமேடு செல்வா, பெரியார் நகர் தங்கேசு ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×