என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கிருஷ்ணகிரியில் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
- சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.
- பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
இந்த மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டார். இந்த முகாமில், பொது மருத்துவம், நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய், தோல், இருதயம், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், மகளிர், ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், இசிஜி பரிசோதனை, சளி பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள், உயர் சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.
இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரமேஷ்குமார், தொற்றாநோய் அலுவலர் டாக்டர்.திருலோகன், டாக்டர்கள் சுசித்ரா, செல்வி, விமல்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தமிழ்வாணன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராமச்சந்திரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்