என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சியில் நகை பட்டறையில் 8 பவுன் நகை திருட்டு வேலைக்கு சேர்ந்த 1 வாரத்தில் தொழிலாளி கைவரிசை
- மேலும் நகையை எடுத்துச் சென்ற வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குமாரிடமிருந்து வாங்கி சென்ற மோட்டார் சைக்கி ளை அவர் எங்காவது பஸ்நிலையம் அல்லது ெரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நாகர்கோவில், அக்.20-
நாகர்கோவில் கோட்டார் மேல தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் கடியப்ப ட்டணத்தில் நகை பட்டறை வைத்துள்ளார்.தினமும் காலையில் சென்று விட்டு குமார் இரவு வீட்டிற்கு வருவது வழக்கம்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவரது நகை பட்ட றையில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார்.அவர் குமார் வீட்டிலேயே தங்கினார். தினமும் குமார் வேலைக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து செல்வது வழக்கம்.
நேற்றும் குமார் வேலைக்கு சென்றபோது அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மதியம் குமார் கடையில் இருந்து வெளியே சென்று விட்டு பின்னர் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்த வட மாநில தொழிலாளியை சாப்பிட்டு விட்டு வருமாறு கூறினார்.
இதையடுத்து அவர் குமாரின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றார். சாப்பிட சென்ற வட மாநில தொழிலாளி நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் குமார் அவரை தேடினார்.
பின்னர் அவரது பட்ட றையிலிருந்து நகையை சோதனை செய்தபோது 8 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மாயமான நகையை வட மாநில தொழிலாளியே எடுத்து சென்றிருக்க லாம் என்று குமார் மண வாளக்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். குமாரின் நகை பட்டறையில் அந்த வாலி பரை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் நகையை எடுத்துச் சென்ற வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குமாரிடமிருந்து வாங்கி சென்ற மோட்டார் சைக்கி ளை அவர் எங்காவது பஸ்நிலையம் அல்லது ெரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிளை தேடும் பணி நடந்து வருகிறது. வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே நகை பட்டறையிலிருந்து நகையை வடமாநில தொழி லாளி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது






