என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சீர்காழியில், பொது இடத்தில் குப்பை ெகாட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழு- நகர்மன்ற தலைவர் தகவல்
- சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மீறி குப்பைகள் கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது: -
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சியில் உள்ள24 வார்டுகளிலும் தற்காலிக மற்றும் நிரந்த தூய்மைபணியாளர்களை 107பேரை கொண்டு நாள்தோ றும் வீடுகளில் வழங்ப்படும் மக்கும்குப்பைகள்,மக்காத குப்பைகளை தரம்பிரித்து வாங்கப்படுகிறது.
நகரில் நாள்தோறும் மக்கும் குப்பை ஆறரை டன் உட்பட 12டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.இவ்வாறு சேகரம் ஆகும் குப்பைகள் நகராட்சி உரகிடங்கிற்கு கொண்டுசெல்லப்படுகிறது.
அதில் மக்கும் குப்பைகள் மட்டும் உரகிடங்கில் கொட்டப்படுகிறது.மக்காத உடைந்த பாட்டில், நெகிழி போன்ற குப்பைகள் அரியலூர் சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மைபணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
உரகிடங்கில் குப்பை மேடு இல்லாத நிலையை உருவாக்கிட நடவடிக்கைகள் நடை முறைப்படுத்தபடுகிறது.
அவ்வாறு நகரில் பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுத்திட குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகருகே வசிக்கும் மக்கள் அந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் கொண்ட குழு அமைத்து, குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து தடுத்திடவும் மீறி கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம் நடைமுறை ப்படுத்த ப்படவுள்ளது. தூய்மையான நகராட்சியாக மேம்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்