என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்ரூ.240 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 429 புதிய வீடுகள்
- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகின்றது.
கோவை,
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேரில் பார் வையி ட்டு ஆய்வு மேற ்கொண் டார். இந்த ஆய் வின ்போது கூடுதல் கலெ க்டர் (வள ர்ச்சி) அலர் மேல் மங்கை, பொள் ளாச்சி சப்-கலெ க்டர் பிரிய ங்கா மற்றும் வள ர்ச்சித் துறை அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்- அமைச்சர் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என பெயர் மாற்றினார்.
மேலும் இலங்கை அகதிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு தனியே ஒரு குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகின்றது.முதல்-அமைச்சர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை புதிதாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 300 சதுர அடி கொண்ட 4 வீடுகளை தொகுப்பு வீடாக கட்டுவதற்கு வீடு ஒன்றிக்கு ரூ.5 லட்சம் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு வீடு ஒன்றிக்கு ரூ.5.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
மேலும் இத்திட்டம் ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது.கோவை மாவட் டத்திலுள்ள மேட்டு ப்பாளையம் வேடர் காலனி, பேரூர் பூலுவபட்டி, கோட்டூர் ஆழியார் ஆகிய 4 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1059 குடும்பங்களை சேர்ந்த 3,002 மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனைமலை வட்டார த்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 397 வீடுகள் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 112 வீடுகள் என மொத்தம் 429 வீடுகள் ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வருகின்றது. ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






