என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில், குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
- பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
- அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.
பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது.
எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்