search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேதாரண்யத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
    X

    மாரத்தான் போட்டியை டி.எஸ்.பி முருகவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    வேதாரண்யத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது.
    • நகராட்சி ஆணையர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழாபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 8 கி.மீமாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்

    வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பெண்கள் கான மாரத்தான் ஒட்ட பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்பு ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்பந்தயத்தை டிஎஸ்பி முருகவேல் துவக்கி வைத்தார். ஒட்டபந்தயதில் 1500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்துகொண்டனர்

    நிகழ்ச்சியில்நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்கோடியக்கரை வணச்சரகர் அயூப் கான் நகராட்சி பொறியாளர் முகமது இப்ரஹீம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள்கலந்து கொண்டனர்வெற்றி பெற்ற வீரர்களுக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி பரிசுகளை வழங்கினர்.

    Next Story
    ×