search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்
    X

    விஜய்வசந்த் எம்.பி.

    குமரியில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேச்சு
    • வசதிகளை அதிகரித்தால் கன்னியாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சமர்ப்பித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பி னர் விஜய்வசந்த் பேசிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த தேவை யான நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க குஜ ராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்தது போன்று கன்னி யாகுமரியில் பெருந்தலைவர் காமராஜ ருக்கு சிலை அமைக்க வேண்டும்.

    மேலும் குமரி மாவட்டத் தில் தேவையான ரெயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி கள் இல்லாததால் கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வர பிற மாநில மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பணிகள் பயன் பெறும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக கன்னி யாகுமரிக்கு வரும் ரெயில்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தி குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும்.

    ஒரு புறம் கடலாலும் மற்றொரு புறம் மலைகளா லும் சூழப்பட்டு பச்சை பசேல் என இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத் தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரு கின்றனர். ஆனால் வசதி களை அதிகரித்தால் கன்னி யாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும். மேலும் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலங்களை கொண்டி ருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழி பாட்டுத் தலங்களை மேம்ப டுத்தி ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும்.

    மகா சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் அமைந் துள்ள 12 சிவாலயங்க ளுக்கு இடையே சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் மூலம் இந்த கோவில்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி மக்கள் அதிகமாக இந்த கோவில்களுக்கு சென்று வர கோவில்களின் சுற்று வட்டம் மற்றும் இணைப்பு சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளை சீர மைத்து மேம்படுத்தினால் இந்த கடற்கரைகள் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாறி லட்சக்க ணக்கான சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க முடியும். மேலும் அழகான மலைத்தொடர்கள், அருவி கள், அணைகள் என சுற்று லாவுக்கு தேவையான அனைத்தையும் வரமாக பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிக கவனம் செலுத்தி சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு அது வேலைவாய்ப்புக்கான வழிவகையை செய்து தரும்.

    குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டே லுக்கு 600 அடி உயரத்தில் சிலை அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்த்தது போல கன்னியாகுமரியிலும் முன் னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ ருக்கு வானளாவிய சிலை அமைத்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண் டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×