search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டையொட்டி கடலில் இறங்க தடை
    X

    கோப்பு படம் 

    புத்தாண்டையொட்டி கடலில் இறங்க தடை

    • பைக் ரேசில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைவரும் தயா ராகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங் களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் புத்தாண்டு கொண் டாட்டங்கள் ஓட்டல்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நாகர்கோவிலில் உள்ள ஓட்டல்களிலும் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள லெமூர்பீச், சங்குதுறை , கன்னியாகுமரி பீச், முட்டம் பீச், சொத்த விளை பீச், மேலும் பீச்சில் உள்ள பூங்காக்கள், முட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் துறைமுகங்கள் உட்பட கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை.

    இன்று இரவு பொது மக்களுக்கோ போக்கு வரத்துகோ இடையுறு ஏற்ப டும் படி சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாடத்தின்போது இளைஞர்களால் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்ப டாத வண்ணம் இளை ஞர்களின் பெற்றோர் உறுதி செய்யவேண்டும். புத்தாண்டு இரவில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்" செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்கு களையும் பறிமுதல் செய் யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்' செய்வது, அஜாக்கிரதையாகவும், அதி வேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்தி விட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும்.

    புத்தாண்டு தினத்தன்று வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல் களை அருகிலுள்ள ேபாலீஸ் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் அனை வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்ற வர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சி யான முறையில் புத்தாண்டி னை கொண்டாடவும், பொது மக்கள் அனை வருக்கும் மாவட்ட போலீஸ் துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    Next Story
    ×