search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

    புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நாகர்கோவில்:

    புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராத னையும் நடந்தது. புத் தாண்டையொட்டி அதிகாலையிலேயே கோவிலுக்கு பக்தர்கள் வர தொடங்கினார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது.

    குடும்பத்தோடு ஏராள மானோர் வந்து நாகராஜரை வழிபட்டு சென்றனர். நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாலூற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.

    வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவி லிலும் சாமி தரிசனத் திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த னர். பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பணிவிடை ,வாகன பவனியும் நடந்தது.சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்திருந்தனர். தற்பொழுது மார்கழி திருவிழா நடை பெற்று வரும் நிலையில் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அய்யப்ப பக்தர் களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது.

    கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், வெள்ளிமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×