search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தளம் அருகே கட்டிடத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
    X

    கைது செய்யப்பட்டுள்ள நிஜித் 

    புத்தளம் அருகே கட்டிடத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • சுசீந்திரம் போலீசார் 5 பிரிவுகளில் நிஜித் மற்றும் மகேஷ் மீது வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    புத்தளம் அருகே உள்ள அரியபெருமாள்விளை காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நிஜித் (25) மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருடன் கட்டிட வேலைக்கு சென்றனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்குதல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுரேஷ் இரவு 8.30 மணி அளவில் தனது மனைவி கவிதாவுடன் அப்பகுதியில் உள்ள கடைக்கு வரும்போது நிஜித் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து சுரேசை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி, நிஜித் கையில் வைத்திருந்த கம்பியால் சுரேசை தாக்கினார்.பின்னர் 2 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    படுகாயம் அடைந்த சுரேசை அவருடைய மனைவி கவிதா மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், 5 பிரிவுகளில் நிஜித் மற்றும் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நிஜித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×